லக்னோவில் ஞாயிற்றுக்கிழமை (29.10.2023) அன்று நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. முன்னணியில் இருந்து அணியை வழிநடத்தி, ரோஹித் 101 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார், இந்திய வீரர்கள் மிகவும் திறமையாக விளையாடி ( 221/9 ) ரன்களை குவித்தனர்.
இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி 12 புள்ளிகளுடன் உலகக்கோப்பை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 6 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ள இங்கிலாந்து, பத்து அணிகள் கொண்ட போட்டியில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.