திரைப்பட உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதிற்கு இரண்டு இந்திய படங்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
திரைப்பட உலகில் இருப்பவர்களின் கனவாக, லட்சியமாக இருக்கும் ஒரே விருது ’ஆஸ்கார் விருது’ என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அந்தவகையில், கடந்த ஆண்டு இந்திய மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம்தான் ‘காஷ்மீர் பைல்ஸ்’ மற்றும் காந்தாரா.
இப்படிப்பட்ட சூழலில், இந்திய திரைப்படங்களான ‘காஷ்மீர் பைல்ஸ்’ மற்றும் ’காந்தாரா’ திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டு இருப்பது இந்திய மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.