அமெரிக்காவின் ‘பியூ’ ஆய்வு மையம். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் செயல்பட்டு வருகிறது. சமூக பிரச்சனைகள், பொதுக் கருத்துக்கள் உள்ளிட்ட தகவல்களை கருத்துக் கணிப்பு செய்து இந்த நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்நாட்டின் முக்கிய சிந்தனை குழுமமாகவும் இந்த ஆய்வு மையம் விளங்குகிறது.இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து உலக அளவில் உள்ள பார்வை,சர்வதேச சக்தியாக இந்தியா உருவாகும் வாய்ப்பு மற்ற நாடுகள் பற்றி இந்தியர்களின் கருத்து உள்ளிட்டவை தொடர்பாக அந்த நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது. இதில் 80% இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு சாதகமாக கருத்து தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டப்பிடப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக இந்தியாவின் செல்வாக்கு பன்மடங்கு உள்ளதாக 10-பேரில் 7 இந்தியர்கள் உறுதியாக நம்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.