அயோத்தி விவகாரத்தில் முஸ்லிம் தரப்பு மனுதாரராக இருந்த இக்பால் அன்சாரிக்கு அழைப்பிதழ் !

அயோத்தி விவகாரத்தில் முஸ்லிம் தரப்பு மனுதாரராக இருந்த இக்பால் அன்சாரிக்கு அழைப்பிதழ் !

Share it if you like it

பாரதத்தின் ஆன்மீக கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கவிருக்கும் அயோத்தி ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் ஜனவரி 22 அன்று நடைபெறவிருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து, வரும் 22ம் தேதி அன்று நமது பிரதமர் கரங்களால் திறந்து வைக்கப்பட உள்ளது. பகவான் ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம், பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளிப் பண்டிகையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பாரத பிரதமர் மோடி அவர்கள், கோவில் திறப்பு தினத்தன்று நாட்டு மக்கள் அனைவரையும் அவரவர் இல்லங்களில் தீபங்கள் ஏற்றிக் கொண்டாடக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிகழ்விற்காக , ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக பிரமுகர்கள், தன்னார்வலர்கள் என பலரும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்களை சந்தித்து அழைப்பிதழ் மற்றும் அட்சதையை வழங்கி வருகின்றனர். முன்னதாக தன்னார்வலர்கள் ராஜ்பவனில் ஆளுநர் ரவியை சந்தித்து ஸ்ரீராம ஜென்மபூமி அட்சதையை வழங்கினர். அதன்பிறகு ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எடப்பாடி. பழனிசாமியை சந்தித்து அழைப்பிதழை வழங்கினர். இதுதவிர திரை பிரபலங்களான நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கும் அழைப்பதழ் வழங்கப்பட்டது.

அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் திறப்பு விழாவில் மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு துறைகளில் சாதித்த பிரபலங்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். தற்போது ஒவ்வொருவருக்கும் கோவில் அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் என்பது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அயோத்தி விவகாரத்தில் முஸ்லிம் தரப்பு மனுதாரராக இருந்த இக்பால் அன்சாரிக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக உச்ச நீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியதையடுத்து ராமர் கோயில் பூமி பூஜை போடுவதற்கான முதல் அழைப்பிதழ் இக்பாலுக்குதான் வழங்கப்பட்டு இருந்தது. ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கப்பட்டது தொடர்பாக இக்பால் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ” ராமர் கோவிலில் ராமர் சிலை நிறுவப்பட உள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.


Share it if you like it