ஜனவரி 22-ஆம் தேதி இத்தனை மாநிலங்களுக்கு விடுமுறையா ?

ஜனவரி 22-ஆம் தேதி இத்தனை மாநிலங்களுக்கு விடுமுறையா ?

Share it if you like it

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், மிக பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலில் வருகிற 22-ஆம் தேதி பிராண பிரதிஷ்டை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.

இராமர் கோவில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கும் வகையில், நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், ஆன்மீக பெரியவர்கள், திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.

இராமர் கோவில் பிராண பிரதிஷ்டை தினத்தன்று, மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், வங்கிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மாநில அரசுகளும் விடுமுறை அறிவித்து வருகின்றன.

அந்தவகையில், திரிபுரா, சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி 22-ஆம் தேதி அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மகாராஷ்ட்ரா உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், கோவா, புதுச்சேரி, அரியானா, ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் இராமர் கோவில் பிராண பிரதிஷ்டை தினத்தன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it