பெண் குற்றச்சாட்டில் சிக்கிய சரவணன் கல்வி குழு உறுப்பினரா? முதல்வருக்கு குவியும் எதிர்ப்பு..!

பெண் குற்றச்சாட்டில் சிக்கிய சரவணன் கல்வி குழு உறுப்பினரா? முதல்வருக்கு குவியும் எதிர்ப்பு..!

Share it if you like it

  • தமிழக பெண்களின் இடுப்பு குறித்து ஆய்வு செய்த திண்டுக்கல் லியோனியை தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக நியமனம் செய்தது.
  • மாவோயிஸ்ட் அனுதாபியாக இருக்கிறார் என்று ராஜ் மரியா சூசை என்பவர் மீது தொடர் குற்றச்சாட்டுகள் அவர் மீது கூறப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் தமிழக அரசு அவரை Tamil Nadu Public Service Commission பதவியில் அமர்த்தியது.
  • ஹிந்துக்களை மட்டுமே குறி வைத்து தாக்கி பேசுபவரும், கள்ளக் காதலுக்கு புது விளக்கம் கொடுத்தவரும் பலரால் அன்போடு அழைக்கப்படும் வீரமணியின் மிக நெருங்கிய கூட்டாளியான சுப.வீ-க்கு தமிழ்நாடு பாடத்திட்ட நிறுவன அறிவுரைக் குழு உறுப்பினராக தமிழக அரசு அண்மையில் நியமனம் செய்து இருந்தது.
  • இதனை தொடர்ந்து தமிழ்நாடு பாடநுால் நிறுவன அலுவல் சாரா கல்வி குழு உறுப்பினராக வருமான வரித் துறை அதிகாரி சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார் இவர் மீது பலரும் கடும் குற்றச்சாட்டுக்களை வைக்கின்றனர்.

இது குறித்து, பிரபல எழுத்தாளர் பிரபாகரன் கூறியதாவது:

பாடத்திட்டம் தொடர்பான ஆலோசனை வழங்க அமைக்கப்பட்டுள்ள குழுவில், சரவணன் இடம் பெற்று இருப்பது, அந்த குழு எப்படி செயல்படும் என்ற, அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சரவணன், பெண்களை எப்படி அணுகுவார் என்பதற்கு ஏராளமான புகார்கள், சமூக வலைதளங்களிலும், பத்திரிகைகளிலும், ‘மீ டூ’ புகார்களாக வெளியாகி உள்ளன.

அதற்கு, இதுநாள் வரை, சரவணனிடம் இருந்து, எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அவருடையது இடதுசாரி சிந்தனை. அவருடன் தொடர்பில் இருப்பவர்களும், நாட்டுக்கு எதிராக போராடும் மனநிலையில் இருப்பவர்களே. அவர் தன் முகநுால் பக்கத்தில் தொடர்ந்து, பிரதமர் மோடியின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார்.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., குறித்து அவர் எழுதிய ‘உடையும் திரைகள்’ என்ற நுாலில், கேவலமாக விமர்சித்திருக்கிறார். இதே குழுவில், பாலகுருசாமி, மயில்சாமி அண்ணாதுரை போன்ற, கல்வியாளர்கள் பலரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அப்படிப்பட்ட குழுவில், பெண் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான சரவணன் இடம் பெறலாமா? என்று குறிப்பிட்டு உள்ளார்.

தமிழக பெண்ளை இழிவுப்படுத்திய லியோனி, கள்ள உறவுக்கு புது விளக்கம் அளித்த சுப.வீ தற்பொழுது பெண்களின் குற்றச்சாட்டுக்கு உள்ளான சரவணனுமா? தமிழக முதல்வரை தவறாக வழி நடத்துவது யார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 


Share it if you like it