கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கம்யூனிஸ்ட் அரசு ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் பினராயி விஜயன் முதல்வராக பொறுப்பேற்று 8 ஆண்டுகள் ஆகிறது. இந்த 8 ஆண்டுகளில் இதுவரை எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியுள்ளனர். அதில் கிடைத்த தகவலின்படி 8 ஆண்டுகளில் வெறும் 5839 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாக ஆர்டிஐ தெரிவித்துள்ளது.
மக்களுக்கு பயன்படும் வகையில் எந்த நலத்திட்டமும், வேலைவாய்ப்பும் இல்லாமல் எப்படி கம்யூனிச பினராயி விஜயனை முதல்வராக கேரளா மக்கள் தேர்வு செய்கிறார்கள் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.