அடைக்கலம் தந்தால் சிறை : எச்சரிக்கும் அதிகாரிகள் !

அடைக்கலம் தந்தால் சிறை : எச்சரிக்கும் அதிகாரிகள் !

Share it if you like it

திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் சகோதரர்களுக்கு அடைக்கலம் தருவோர் மீது, வழக்குப்பதிவு செய்யப்படும்’ என, போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தி.மு.க., அயலக பிரிவு முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனுமான ஜாபர் சாதிக், கைது செய்யப்பட்டு டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது சகோதரரும், வி.சி., முன்னாள் நிர்வாகியுமான முகமது சலீம், மற்றொரு சகோதரரும், அமீர் இயக்கி வரும், ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்ற படத்தின் நடிகருமான மைதீன், ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

இதனை அடுத்து விமான நிலையங்களுக்கு, ‘லுக் அவுட்’ நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது.ஜாபர் சாதிக், முகமது சலீம் மற்றும் மைதீன் ஆகியோரின் கூட்டாளிகள் 23 பேர், தலைமறைவாக உள்ளனர். அவர்களையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முகமது சலீம், மைதீன் ஆகியோர் பதுங்கி இருக்கும் இடங்கள் குறித்து ரகசிய தகவல்கள்
கிடைத்துள்ளதாகவும், அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இவர்களுக்கு அடைக்கலம் தருவோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *