இந்தியாவில் 40% நிலப்பரப்பைக் கேளுங்கள்: பிரிவினையை தூண்டி விடும் ஜெகத் கஸ்பார்!

இந்தியாவில் 40% நிலப்பரப்பைக் கேளுங்கள்: பிரிவினையை தூண்டி விடும் ஜெகத் கஸ்பார்!

Share it if you like it

பட்டியல் சமூகத்தினரும், இஸ்லாமிய சமூகத்தினரும் 40 சதவிகிதம் பேர் இந்தியாவில் வசிக்கிறீர்கள். ஆகவே, 40 சதவிகித நிலப்பரப்பைக் கேளுங்கள் என்று கத்தோலிக்க பாதிரியார் ஜெகத் கஸ்பார் பிரிவினையை தூண்டி விட்டிருக்கும் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே, அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து வெளியே வராத வகையில் சிறையில் அடைக்க வேண்டும் என்று கலகக்குரல் எழுப்புகிறார்கள் தேச பக்தர்கள்.

இதுகுறித்து தேச பக்தர்கள் சிலர் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகத் கஸ்பார் ராஜ். இவர் ஒரு கத்தோலிக்க பாதிரியார். தமிழ் மையம் என்கிற அமைப்பை நிறுவிய இவர், தமிழர் தொழில் வர்த்தக விவசாயப் பெருமன்றம் என்கிற அமைப்பையும் தொடங்கினார். தவிர, சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டவர். தி.மு.க. அபிமானியாக வலம்வரும் இவர் கனிமொழியின் ஆதரவாளராக கருதப்படுகிறார். இவர், முழுக்க முழுக்க மத மாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார். தவிர, ஹிந்துக்களுக்கும், ஹிந்து அமைப்புகளுக்கும் எதிராக செயல்படுவதோடு, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக செயல்படுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா நிறுவனத்தாரின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை தூண்டி விட்டு போராட்டத்தில் ஈடுபட வைத்த சூத்திரதாரி என்றும் சொல்லப்படுகிறது. இதேபோல, கூடங்குளம் அணு உலைக்கு எதிராகவும் மக்களை தூண்டி விட்டு போராட்டத்தில் ஈடுபட வைத்த அன்னிய கைக்கூலி என்றும் சொல்கிறார்கள். தற்போது வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை விற்க முடிவு செய்திருக்கும் நிலையில், அதை கனிமொழி தரப்புக்கு வாங்கிக் கொடுக்க மறைமுகமாக அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவரும் எல்லாத் திட்டங்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் எதிர்ப்புத் தெரிவித்து மக்களை தூண்டி விடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்” என்றார்கள்.

இந்த ஜெகத் கஸ்பர்தான் தற்போது நாட்டை பிளவுபடுத்தும் வகையில், பட்டியலின சமூகத்தினர் மற்றும் இஸ்லாமியர்களை சமீபத்தில் தூண்டி விட்டிருக்கிறார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும் ஜெகத் கஸ்பார், “இந்த நாட்டில் ஆதிகுடியைச் சேர்ந்தவர்களும் (பட்டியலின சமூகம்), இஸ்லாமியர்களும் 40 சதவிகிதம் பேர் வசிக்கிறீர்கள். ஆனால், நாடாளுமன்றத்தில் இரு சமூகத்தினரும் எந்த பிரதிநிதித்துவமும் இல்லை. கேபினட் அமைச்சர் பதவியை கொடுக்காமல் டோக்கன் போடுவது போல துணை அமைச்சர்களை கொடுத்திருக்கிறார்கள். ஆகவே, நீங்கள் இரு சமூகத்தினரும் இணைந்து 40 சதவிகித நிலப்பரப்பை எங்களுக்கு பிரித்துக் கொடுங்கள். நாங்கள் எங்காவது சென்று நிம்மதியாக வாழ்ந்து கொள்கிறோம் என்று மத்திய அரசிடம் கேளுங்கள்.

ஆதி குடியினர் கேட்காவிட்டால், இஸ்லாமியர்களாவது கேளுங்கள். நீங்கள் 20 சதவிகிதம் பேர் இருக்கிறீர்கள். ஆகவே, 20 சதவிகித நிலப்பரப்பை கேளுங்கள். அப்படி 20 சதவிகிதம் என்றால் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு அளவுக்கு நிலப்பரப்பு உங்களுக்கு கிடைக்கும் அல்லவா? முடியாது என்றால் அட்லீஸ்ட் சகாரா பாலைவனத்தையாவது கொடுங்கள், நாங்கள் அங்கு சென்றாவது வாழ்ந்து கொள்கிறோம் என்று சொல்லுங்கள். ஏதாவது ஒன்றை கேட்டால்தானே கிடைக்கும்” என்று நாட்டு மக்களிடம் பிரிவினையை தூண்டும் வகையிலும், நாட்டை பிளவுபடுத்தும் வகையிலும் பேசியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த காணொளியை பார்த்த இந்திய மக்கள் கொதித்துப் போய் கிடக்கிறார்கள். ஏற்கெனவே, நாடு சுதந்திரம் பெற்றபோதே பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று நாட்டை பிளவுபடுத்தி சிதைத்து விட்டார்கள். இந்த நிலையில், தற்போது இதுபோன்ற அன்னிய கைக்கூலிகள் நாட்டை மேலும் துண்டாட நினைக்கிறார்களே என்று குமுறுகிறார்கள். ஆகவே, நாட்டை பிளவுபடுத்த தூண்டி விடும் இதுபோன்ற அன்னிய கைக்கூலிகளை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து வெளியே வராதபடி சிறையில் அடைக்க வேண்டும் என்று தங்களது கோவத்தை கொட்டி வருகின்றனர்.


Share it if you like it