கேரள மாநிலத்தை சேர்ந்த ஜஸ்னா சலீம் என்பவருக்கு 28 வயது. கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த இவர் பால கிருஷ்ணரின் ஓவியங்களை கடந்த ஆறு ஆண்டுகளாக வரைந்து வருகிறார். உலக புகழ் பெற்ற குருவாயூர் கோவிலுக்கு இவர் வரைந்த ஓவியத்தை வழங்கியுள்ளார் என்பதன் மூலம் இவரின் திறமையை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.
சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தாலும், அதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல். கண்ணன் மீது பாசம் வைத்து உள்ள ஜஸ்னா சலீமின் மனஉறுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.