ஜெயலலிதா அம்மா, மோடி அப்பா, என்றால் என்ன உறவு முறை? தி.மு.க-வின் மூத்த ஆபாச பேச்சாளர் தயாநிதி மாறன் சர்ச்சை கருத்து..! 

ஜெயலலிதா அம்மா, மோடி அப்பா, என்றால் என்ன உறவு முறை? தி.மு.க-வின் மூத்த ஆபாச பேச்சாளர் தயாநிதி மாறன் சர்ச்சை கருத்து..! 

Share it if you like it

மத்திய, மாநில அரசுகள், தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதனை அடுத்து விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், முதற்கொண்டு தங்கள் பங்களிப்பை மக்களுக்கு வழங்கினர்.

மக்களே பிச்சை எடுத்து கொண்டு இருக்கிறார்கள், முதல்வரும், பிரதமரும், மக்களிடம் பிச்சை எடுக்கிறார்கள். என்று மிக கீழ்த்தரமாக உயர்ந்த பொறுப்பில் உள்ள மோடியையும், எடப்பாடியையும், கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார் தயாநிதி மாறன்.

கடந்த ஆண்டு, தலைமை செயலாளரை சந்தித்து மனுக்களை வழங்கி விட்டு. வெளியே வந்து செய்தியாளர்களிடம், பேசும் பொழுது இவ்வாறு கூறி இருந்தார். “எங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினர். நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா, தாழ்த்தப்பட்ட ஆட்களா?”, என்று தனது மனதில் உள்ள வன்மத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

அதாவது, தாழ்த்தப்பட்ட மக்களை தான் மூன்றாம் தர மக்கள் போல நடத்துவார்கள். நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா என்று. பட்டியல் சமூக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக., தனது அழுக்க நிறைந்த வன்மத்தை வெளிப்படுத்தியதற்கு. அந்நாட்களில் மக்கள் தங்களின் கடும் எதிர்ப்பினை தயாநிதிக்கு தெரிவித்து இருந்தனர்.

ஆர்.எஸ். பாரதி, தமிழன் பிரசன்னா, ஆ.ராசா, உதயநிதி ஸ்டாலின், போன்ற ஆபாச பேச்சாளர்கள் வரிசையில். மிக முக்கியமான நபராக தயாநிதி மாறன் ஒருவரும் இருந்து வருவது அனைவரும் அறிந்ததே இந்நிலையில்.

கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து பேசும் பொழுது இவ்வாறு கூறியுள்ளார் மூத்த ஆபாச பேச்சாளர் தயாநிதி மாறன்.

ஜெயலலிதா எங்களுக்கு அம்மா என்று சொல்கிறார்கள், மோடியை ‘டாடி’ என்று சொல்கிறார்கள். இது என்ன உறவு முறை நீங்களே பாருங்கள். இதை நாம் சொன்னால் தவறு என்று சொல்வார்கள் என்று கூறியுள்ளார்.

 

 

 


Share it if you like it