ஹிந்து மதத்தை பழித்தால் நீ கோடீஸ்வரன்: உண்மை உடைத்த எழுத்தாளர் ஜெயமோகன்!

ஹிந்து மதத்தை பழித்தால் நீ கோடீஸ்வரன்: உண்மை உடைத்த எழுத்தாளர் ஜெயமோகன்!

Share it if you like it

ஹிந்து மதத்தை இழிவாக பேசினால் கார், பங்களா என்று வசதி வாய்ப்பாக வாழலாம். இதுதான் இன்று தமிழகத்தில் நடந்து வருகிறது என்று எழுத்தாளர் ஜெயமோகன் உண்மையை போட்டு உடைத்திருக்கிறார்.

தமிழகத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படுபவர் ஜெயமோகன். சிறுகதைகள் மட்டுமின்றி திரைப்படங்களுக்கும் திரைக்கதை எழுதி இருக்கிறார். குறிப்பாக, நான் கடவுள், அங்காடித் தெரு, நீர்ப்பறவை, கடல், பாபநாசம், சர்க்கார் ஆகிய தமிழ்ப் படங்களும், காஞ்சி, நாக்கு பெண்டா நாக்கு டாக்கு, ஒன் பை டூ ஆகிய மலையாளப் படங்களும் ஹிட்டானவை. தனது எழுத்தாற்றலுக்கு பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார். மலையாள குடும்பத்தில் பிறந்த இவர், படித்தது எல்லாமே தமிழ்நாட்டில்தான். இவர்தான், ஹிந்து மதத்தை இழிவாக பேசுபவர்கள் சொந்தமாக கார், பங்களா என்று வசதியாக வாழலாம் என்று கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக, தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு ஜெயமோகன் அளித்த பேட்டியில், “கிறிஸ்தவ, இஸ்லாமிய மதமாற்ற சக்திகளிடம் பணம் பெற்றுக் கொண்டு ஹிந்து மதத்துக்கு எதிராக பேசுபவர்கள் பெரும்பான்மையினர் இருக்கிறார்கள். ஹிந்து மத விரோத அரசியலை நீங்கள் மேடைகளில் 100 முறை பேசினால் போதும். உங்களால் சென்னையில் பங்களா வாங்க முடியும், கார் வாங்க முடியும். வசதி வாய்ப்பாக வாழ முடியும். ஏழையாக இருக்கக் கூடிய ஹிந்து வெறுப்பாளன் ஒருவன் கூட இந்த தமிழ்நாட்டில் கிடையாது. இதுபோன்ற ஹிந்து விரோத அரசியலை ஹிந்துக்கள் தற்போது புரிந்துகொண்டு ஒன்று திரண்டு வருகிறார்கள். இதனால் பதறிப்போன ஹிந்து விரோத அரசியல்வாதிகள், தற்போது ஹிந்து மதத்துக்குள் பிரிவினை ஏற்படுத்த முனைந்திருக்கிறார்கள்.

இதன் வெளிப்பாடுதான் சைவ மதம் ஹிந்து மதம் கிடையாது என்று சிலர் பேசி வருவதற்கு காரணமாகும். இதுபோன்று பேசுபவர்களுக்கு இதுவரை 100 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு எப்படி பணம் கொடுக்கிறார்கள், எங்கு பணம் கொடுக்கிறார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். ஏனென்றால் நானும் இதற்குள்தான் இருக்கிறேன். குறிப்பாக, கடந்த சில மாதங்களாக நடந்து வரும் இந்திய வெறுப்பு மற்றும் ஹிந்து மத வெறுப்பு காரணமாக சுமார் 50 லட்சம் ஹிந்துக்கள் பா.ஜ.க.வை நோக்கி சென்றிருக்கிறார்கள். இது இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும்” என்று ஒரே போடாக உண்மையை போட்டு உடைத்திருக்கிறார்.

ஆகவே, ஹிந்துக்களே நீங்கள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது!


Share it if you like it

One thought on “ஹிந்து மதத்தை பழித்தால் நீ கோடீஸ்வரன்: உண்மை உடைத்த எழுத்தாளர் ஜெயமோகன்!

Comments are closed.