கிறிஸ்தவ சேவா சங்கத்தில் கொடூரம் – வாய் திறப்பார்களா போராளிகள்

கிறிஸ்தவ சேவா சங்கத்தில் கொடூரம் – வாய் திறப்பார்களா போராளிகள்

Share it if you like it

மதுரை அருகே கிறிஸ்தவ சேவா சங்கம் எனும் ஆதரவற்றோர் மற்றும் மனநலம் குன்றியவர்களுக்கான காப்பகம் செயல்பட்டுவந்துள்ளது. அந்த காப்பகத்தில் இருந்த மனநலம் குன்றிய பெண் ஒருவரை, அதே காப்பகத்தை சேர்ந்த 67 வயது மதிக்கத்தக்க ஜீவனேசன் என்பவர் பலமுறை வன்கொடுமை செய்து கர்பமாக்கி உள்ளார். மேலும் யாராவது கேட்டால், அந்த பெண்ணை தந்தை போல் பராமரித்து வந்த தாய் மாமனை தான் அடையாளம் காட்டவேண்டும் என, 7 நாட்கள் இருட்டு அறையில் வைத்து அடித்து துன்புறுத்தி பயிற்சி அளித்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேற்கண்ட செய்தி பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. ஆனால் இதுவரை எந்த சமூக ஆர்வலரோ, மகளீர் அமைப்புகளோ, அரசியல் கட்சி தலைவர்களோ இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே போன்ற ஒரு குற்றசாட்டு வெளியான போது, அமைச்சர் உட்பட பலரும் அந்த நிர்வாகத்தையே அரசுடைமையாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது கொந்தளித்தனர். ஆனால் இப்பொழுது மனநலம் குன்றிய பெண், அதுவும் கர்பவதியை பல நாட்களாக அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்தும், இதில் ஒருவர் கூட வாய் திறக்காதது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Share it if you like it