செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம் : சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகும் #பாதுகாப்பில்லா_தமிழகம் !

செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம் : சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகும் #பாதுகாப்பில்லா_தமிழகம் !

Share it if you like it

திருப்பூர் காமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த செய்தியாளர் நேசபிரபு தன்னை மர்ம நபர்கள் தொடர்ந்து கண்கானித்து வருவதாகவும் தனக்கு பாதுகாப்பு அளித்து குற்றவாளிகளை கைது செய்யுங்கள் என காவல் துறையினரிடம் மன்றாடுகிறார். ஆனால் காவல் துறையினரோ துரித நடவடிக்கை மேற்கொள்ளாமல் மெத்தனமாக இருந்ததன் விளைவால் தற்போது மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் தாக்குதலில் படுகாயம் அடைந்த நேசபிரபு அவர்களின் சிகிச்சைக்கு 3 லட்ச ரூபாய் அரசு அறிவித்துள்ளது. தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த காவல் ஆய்வாளர் ரவி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளமான X ல்

பாதுகாப்பில்லா_தமிழகம் என்கிற ஹாஷ்டாக் டிரெண்டாகி வருகிறது.


Share it if you like it