ஆங்கிலேயனுக்கு ஆதரவாக செயல்பட்ட ஈ.வெ.ரா-விற்கு 135 அடி சிலை என்றால்..! ஆங்கிலேயனை எதிர்த்த பசும்பொன் தேவருக்கு அதே மாவட்டத்தில் 150 அடி உயரத்தில் சிலை அமைப்போம் – தென்னிந்திய பார்வர்ட் பிளாக் சரவெடி…!

ஆங்கிலேயனுக்கு ஆதரவாக செயல்பட்ட ஈ.வெ.ரா-விற்கு 135 அடி சிலை என்றால்..! ஆங்கிலேயனை எதிர்த்த பசும்பொன் தேவருக்கு அதே மாவட்டத்தில் 150 அடி உயரத்தில் சிலை அமைப்போம் – தென்னிந்திய பார்வர்ட் பிளாக் சரவெடி…!

Share it if you like it

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் திருச்சி சிறுகனூர் ” பெரியார் உலகம் ” என்ற பெயரில், அவருக்கு 95 அடி உயர சிலை, அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 135 அடி உயரத்தில் பெரியார் சிலை அமைய இருக்கும் அதே திருச்சி மாவட்டத்தில் 150 அடி உயரத்தில் சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு சிலை அமைக்கும் பணியை முக்குலத்தோர் அமைப்புகள் தொடங்க செய்திகள் வந்த வண்ணம் உள்ளது..

இது குறித்து தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவன தலைவர் திருமாறன் அவர்கள் கூறியதாவது..

இந்தியாவின் சுதந்திர தினம் கருப்பு தினம் என்றும், தொடர்ந்து ஆங்கிலேயனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு தமிழகத்தில் சிலை அமைக்கப்பட இருக்கும் நிலையில், சுதந்திர போராட்டத்தின் போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களோடு இணைந்து ஆங்கிலேயனுக்கு எதிராக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பசும்பொன் தேவர் அவர்களுக்கு திருச்சியில் அமைய இருக்கும் பெரியார் சிலையை விட உயரமாக சிலை அமைக்கப்படும்.

திருச்சியில் 150 – அடி உயரத்தில் பசும்பொன் தேவர் சிலை அமைய இருக்கும் வளாகத்தில் நூலகம், பொழுது போக்கு பூங்கா, பசும்பொன் தேவர் குறித்த அருங்காட்சியம் போன்ற சிறப்பு அம்சங்கள் இடம் பெற இருப்பதாக தெரிவித்த திருமாறன் அவர்கள் இது தொடர்பாக முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்தும், முக்குலத்தோர் அமைப்புகளை சந்தித்தும் பேசி வருவதாக தெரிவித்து உள்ளார். ,

நன்றி; தினசேவல்..!


Share it if you like it