அமைச்சர் பாராட்டிய டி.எஸ்.பி. ச்சீச்சீ இப்படிப்பட்டவரா?

அமைச்சர் பாராட்டிய டி.எஸ்.பி. ச்சீச்சீ இப்படிப்பட்டவரா?

Share it if you like it

அமைச்சர் கே.என். நேருவின் பாராட்டை பெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் பரவாசுதேவன் பெண் காவல் ஆய்வாளர்களுடன் நெருக்கமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருப்பவர் கே.என். நேரு. இவர், தி.மு.க.வின் மூத்த தலைவர் ஆவார். சமீபத்தில்தான், அக்கட்சியின் முதன்மை செயலாளராக இவர் நியமனம் செய்யப்பட்டார். இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்ட நிகழ்ச்சியில் போது இவ்வாறு பேசினார் ;

இங்கே வந்து இருப்பவர் இன்று டி.எஸ்.பியாக உயர்ந்து இருக்கிறார். ஒரு காலத்தில், எஸ்.ஐ.,யாக இருந்த போது எனக்கு செக்யூரிட்டியாக இருந்தவர். அவருக்கு, இருக்கும் திறமை என்னவென்றால், என்ன வேண்டுமானாலும் செய்ய கூடிய ஆற்றல் பெற்றவர். ஒருவரை குற்றவாளியாக மாற்றவும் முடியும். குற்றவாளியை அதில் இருந்து காப்பாற்றவும் முடியும். இதற்கு, மேல் என்னால் எதுவும் சொல்ல முடியாது. அவர் எங்களோடு வளர்ந்தவர் என குறிப்பிட்டு இருந்தார்.

அமைச்சர் கே.என். நேருவால் பாராட்டப்பட்ட டி.எஸ்.பி பரவாசுதேவன் என்ன செய்வது என்று தெரியாமல் திரு திருவென்று விழித்த காணொளி அனைத்து ஊடகங்களிலும் வைரலாகி இருந்தது. இக்காணொளி, சமூக வலைத்தளங்களில் வெளியாவதற்கு காரணம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில், பரவாசுதேவன் பெண் காவல் ஆய்வாளருடன் சல்லாபத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், விவரங்களுக்கு தந்தி டிவியின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, இருட்டு என மக்கள் கடும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில், பரவாசுதேவனின் செயல் தமிழக காவல்துறைக்கே மிகப்பெரிய கலங்கம் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it