கட்சிக்கு அதிக உறுப்பினர்களை சேர்க்கும் நபர்களுக்கு   தங்க மோதிரம் பரிசு திட்டத்தை அறிவித்த காங்கிரஸ்..!

கட்சிக்கு அதிக உறுப்பினர்களை சேர்க்கும் நபர்களுக்கு தங்க மோதிரம் பரிசு திட்டத்தை அறிவித்த காங்கிரஸ்..!

Share it if you like it

தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 77-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட தலைவர் எம்.ஏ.முத்தழகன், மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, மேலிட பார்வையாளர் ஸ்ரீவல்லபிரசாத் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்பொழுது கட்சி நிர்வாகிகள் ஆட்களை சேர்க்க வைக்கும் வகையில் ஒரு புதிய அறிவிப்பு ஒன்றினை மாவட்ட தலைவர் முத்தழகன் அறிவித்தார்.

“காங்கிரஸ் கட்சியில் அதிகமான உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு ஒரு பவுன் தங்க மோதிரம் பரிசு வழங்கப்படும். 2′-வது இடத்தை பிடிப்பவர்களுக்கு 4 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். மற்றவர்களுக்கு தங்க நாயணங்கள் வழங்கப்படும்” என்று அவர் தெரிவித்து உள்ளார். ஆளே இல்லாத கட்சிக்கு ஆட்களை சேர்க்க காங்கிரஸ் கட்சி எடுத்திருக்கும் இந்த புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நன்றி ; கதிர் நியூஸ்..


Share it if you like it