ஆர்.எஸ்.எஸ். பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் – கே.எஸ். அழகிரி அறிவுரை!

ஆர்.எஸ்.எஸ். பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் – கே.எஸ். அழகிரி அறிவுரை!

Share it if you like it

தேர்தல் காலங்களில் பணம், பிரியாணிக்கு, ஆசைப்படாமல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் பா.ஜ.க.விற்காக எப்படி உழைக்கிறார்கள் பாருங்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பேசிய காணொளி வைரலாகி வருகிறது.

கட்டுப்பான அமைப்பு இருக்கும் இயக்கம் தான் வெற்றி பெற முடியும். ஒவ்வொரு மாநிலத்திலும், பா.ஜ.க.வின் வாக்கு சாவடி ஏஜெண்ட்டுகளாக 7 லட்சம் பேர் இருக்கிறார்கள். அங்குள்ள, அனைவருமே பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் கிடையாது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள். தயிர் சாதம் கட்டி கொண்டு சைக்கிளில் வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் அவர்கள் தான் பூத்தில் உட்காருகிறார்கள். அவர்கள் அந்த பகுதியை சார்ந்தவர்களாக இருக்கின்றனர்.

மிக கடுமையாக உழைக்க கூடியவர்கள். அவர்களிடம் ரூ. 500 பணமோ, பிரியாணியோ, மது பாட்டிலோ வாங்குவதற்காக அங்கு வரவில்லை. கொள்கைக்காக மட்டுமே அங்கு உட்கார்ந்து இருக்கிறார்கள். இதுஎல்லாம், கொடுக்காமல் நம்ம ஆட்கள் அங்கு போய் உட்காருவானா, இதனை முடிவு செய்யாமல் பேருக்கு சத்திரம் மாதிரி ஒன்றை நடத்தி கொண்டு இருந்தால். சந்தை கடை மாதிரி ஒன்றை வைத்திருந்தால் அதனை கொண்டு யுத்தம் செய்ய முடியாது. முதலில் நீங்கள் அதனை புரிந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கி இருக்கிறார்.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு கே.எஸ். அழகிரி வெளியிட்டு இருந்த அறிக்கையில் இவ்வாறு கூறியிருந்தார் ; காங்கிரஸ் 23 -ஆம் புலிகேசி போன்று பலவீனமாக உள்ளது. நம்மிடம் வாளும் இல்லை, படையும் இல்லை. கூட்டணியில் ஒரு எம்.எல்.ஏ, எம்.பி. சீட் பெற்று விடலாம் என கற்பனையில் வாழாமல் இனியாவது கொள்கை அடிப்படையில் வாழ வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.


Share it if you like it