நில அபகரிப்பு, பாலியல் அத்துமீறல்: தி.மு.க. கவுன்சிலர் அராஜகம்!

நில அபகரிப்பு, பாலியல் அத்துமீறல்: தி.மு.க. கவுன்சிலர் அராஜகம்!

Share it if you like it

கள்ளக்குறிச்சியில் அடுத்தவர் நிலத்தை அபகரிக்க முயன்றதோடு, தட்டிக்கேட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தி.மு.க. கவுன்சிலர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகேயுள்ள கிராமம் சுத்தமலை. இக்கிராமத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ வின்சென்ட், பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் சுத்தமலை கிராமத்திலேயே வசித்து வருகிறார்கள். இவர்களுக்குச் சொந்தமாக சுத்தமலை கிராமத்தில் 5 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. இந்த நிலத்தை ரிஷிவந்தியம் ஒன்றிய தி.மு.க. கவுன்சிலராக இருக்கும் ஏசு ரட்சகர் என்பவர் நீண்டகாலமாகவே அபகரிக்க முயன்றிருக்கிறார். ஆனால், ஆண்ட்ரூ வின்சென்ட் குடும்பத்தினர் விட்டுக்கொடுக்கவில்லை.

இந்த சூழலில், வின்சென்ட் குடும்பத்தினர் மேற்கண்ட 5 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டிருந்திருக்கிறார்கள். இது அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், அடியாட்கள் துணையுடன் சென்ற தி.மு.க. கவுன்சிலர் ஏசு ரட்சகர், வின்சென்ட் குடும்பத்தினரை மிரட்டி, விளைநிலத்தில் பயிரிட்டிருந்த கரும்பு பயிர்களை அறுவடை செய்து, தனது பெயரில் மூங்கில்துறைப்பட்டு கரும்பு ஆலைக்கு அனுப்பி 5 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டாராம். இதுகுறித்து வின்சென்ட்டின் மனைவி எல்வீரா, மூங்கில்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்த போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனிடையே, தன் மீது புகார் கொடுக்கப்பட்டதை அறிந்த ஏசு ரட்சகர், அடியாட்களுடன் வின்சென்ட் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அங்கு வின்சென்ட்டின் மனைவி, அவரது சகோதரி, தாயார் மற்றும் சித்தி ஆகிய 4 பெண்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். அப்போது, தன் மீது புகார் எப்படி புகார் கொடுக்கலாம் என்று கேட்டு ஆவேசமடைந்த ஏசு ரட்சகர், எல்வீராவின் தாயார் மற்றும் சகோதரியை கடுமையாகத் தாக்கியதோடு, மானபங்கமும் செய்திருக்கிறார். பாதிக்கப்பட்ட இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, தி.மு.க. கவுன்சிலர் ஏசு ரட்சகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கள்ளக்குறிச்சி எஸ்.பி. அலுவலகத்தில் புகார் செய்திருக்கிறார் வின்சென்ட் மனைவி எல்வீரா. இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Share it if you like it