நான் அப்படி சொல்லவேயில்லையே… கனிமொழி “அந்தர் பல்டி”!

நான் அப்படி சொல்லவேயில்லையே… கனிமொழி “அந்தர் பல்டி”!

Share it if you like it

பூரண மதுவிலக்கு குறித்து நான் பேசவில்லை என தி.மு.க. மூத்த தலைர் கனிமொழி கூயிருக்கிறார். இந்த நிலையில், அவர் பேசிய காணொளிகளும் பத்திரிகை செய்திகளும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பூரண மதுவிலக்கு உண்டு என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதையடுத்து, தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இதே கருத்தினை கூறியிருந்தார். இவர்களின், வாக்குறுதியை நம்பி தமிழக மக்கள் அக்கட்சியை அரியணையில் அமர்த்தினர். இதனிடையே, தமிழகத்தில் விடியல் ஆட்சி அமைந்து 2 வருடங்களை பூர்த்தி செய்துள்ளது. எனினும், பூரண மதுவிலக்கு சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பதே நிதர்சனம்.

இப்படிப்பட்ட சூழலில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார் ; பூரண மதுவிலக்கு என தேர்தல் வாக்குறுதியில் கூறவில்லை; மது விற்பனையை குறைப்பதாகவே நாங்கள் கூறினோம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், எம்.பி. கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பூரண மதுவிலக்கு குறித்து முன்பு பேசிய காணொளிகளும், பத்திரிகை செய்திகளையும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது பகிர்ந்து வருகின்றனர்.

இதுகுறித்தான ஆதாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Image
Image

Share it if you like it