வேறு மாநிலங்களுக்கு வேலை தேடி போங்க – கனிமொழி!

வேறு மாநிலங்களுக்கு வேலை தேடி போங்க – கனிமொழி!

Share it if you like it

மற்ற மாநிலங்களில் வேலை கிடைத்தால் அங்கு போய் பணியாற்றுங்கள் என தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்து இருக்கும் கருத்து பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹிந்தி தெரியாது போடா என்று டீ சர்ட் அணிவது, ஹிந்தி படித்தால் பானிபூரி மட்டும் தான் விற்க முடியும் என பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவது. ஹிந்தி மொழிக்கு, எதிராக பொதுமக்களிடம் வன்மத்தை திணிப்பது என விடியல் ஆட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர். இந்த நிலையில், தி.மு.க. எம்.பி. கனிமொழி, எங்கு வேலை கிடைத்தாலும் போய் சேருங்கள். இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். வேலை கிடைப்பதே தற்போது மிக கடினமாக இருக்கிறது. வெளியூரில், வேலை கிடைத்தால் இன்னும் சந்தோஷமாக அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். உங்களுக்கு, அது ஒரு புது அனுபவமாக இருக்கும் என தெரிவித்து இருக்கிறார்.

கொலை, கொள்ளை, திருட்டு, கஞ்சா என விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது. இதுதவிர, எங்கும் லஞ்சம், எங்கும் ஊழல் என தமிழகம் இருண்ட காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் தான், வெளியூரில் வேலை கிடைத்தால் போய் சேருங்கள் என கனிமொழி பேசி இருக்கிறார். தங்களின், அரசியல் ஆதாயத்திற்காக தமிழக மாணவர்களை ஹிந்தி மொழியை கற்றுக் கொள்ள தடையாக இருந்து விட்டு, தற்போது வேலை தேடி வெளியூர் செல்லுங்கள் என்று கூறுவது சரியா? என கனிமொழியிடம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it