தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் கனிமொழி. இவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என கூறினார். ஸ்டாலின் அரசு அமைந்து இரண்டு வருடங்களை பூர்த்தி செய்துள்ளது. எனினும், பூரண மதுவிலக்கு இன்றுவரை தமிழகத்தில் நடைமுறைக்கு வரவில்லை. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 13-பேர் உயிர் இழந்துள்ளனர். இச்சம்பவம், தமிழக மக்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவிலேயே மிக அதிக அளவில் இளம் விதவைகள் உள்ள மாநிலம் தமிழகம்தான் என கனிமொழி பேசிய காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.