தமிழகத்தை குறைத்துப் பேசிய கனிமொழி – புள்ளி விவரங்களை மறைத்தாரா, மறந்தாரா..?

தமிழகத்தை குறைத்துப் பேசிய கனிமொழி – புள்ளி விவரங்களை மறைத்தாரா, மறந்தாரா..?

Share it if you like it

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத வெறியில் ஏதேதோ பொய்களை பேசி திமுக கூட்டத்தினர் மக்களை ஏமாற்றப்பார்கிறார்கள் என பலரும் கூறிவரும் நிலையில். திமுக எம்.பி., கனிமொழி, கடந்த, 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள, அ.தி.மு.க., அரசு, எந்த அடிப்படை வசதியும் செய்யவில்லை; புதிய வேலைவாய்ப்பு உருவாகவில்லை; தொழில் முதலீடு எதுவும் வரவில்லை. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவிக்கும் அறிவிப்புகளை தான், இ.பி.எஸ்., அரசு செய்கிறது என பேசியுள்ளார். இதற்க்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளது.

புள்ளி விவரங்களின் அடிப்படையில் தேசியளவில் ஆட்சித் திறன், பொது நிர்வாகம் ஆகியவற்றில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் ஏதேதோ வாய்க்கு வந்ததை எல்லாம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பேசலாமா..? என்று அரசியல் நோக்கர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.


Share it if you like it