தாய், மகள், மருமகள்… வலையில் வீழ்த்திய பாதிரியார்: தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம்… போலீஸ் அதிர்ச்சி!

தாய், மகள், மருமகள்… வலையில் வீழ்த்திய பாதிரியார்: தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம்… போலீஸ் அதிர்ச்சி!

Share it if you like it

கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக்ட் ஆன்ட்ரோ விவகாரத்தில் தோண்டத் தோண்ட பூதம் கிளம்பிய கதையாக, ஒரே வீட்டில் தாய், மகள், மருமகளை வலையில் வீழ்த்தி இருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகேயுள்ள பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்ட்ரோ. பிலாங்காலை தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார். தேவாலயத்தில் பாவமன்னிப்பு வழங்கும் இவர், சர்ச்சுக்கு வந்த பெண்களிடம் செல்போன் நம்பர்களை வாங்கி சாட்டிங் செய்து, தனது வலையில் வீழ்த்தி இருக்கிறார். பல ஆண்டுகளாக நீடித்து வந்த இவரது லீலைகள், சட்டக் கல்லூரி பயிலும் ஒரு மாணவரின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. பாதிரியாரின் ஆபாச வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இதையடுத்து, பாதிரியார் பெனடிக்ட் மீது நர்ஸிங் கல்லூரி மாணவி புகார் செய்யவே, தொடர்ந்து பலரும் புகார் செய்யத் தொடங்கினார்கள். இதைத் தொடர்ந்து, பாதிரியாரை அலேக்காக தூக்கிய போலீஸ், கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இந்த சூழலில்தான், பாதிரியார் பெனடிக்டின் லீலைகள் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகிறது. சுமார் 15 வயது முதல் 50 வயது வரையிலான 80-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை பாதிரியார் பெனடிக்ட் லேப்டாப்பில் சேமித்து வைத்திருப்பது தெரியவந்திருக்கிறது.

இதில், வேதனை என்னவென்றால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், மருமகள் என மூன்று பேரிடமும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவருடன் பாதிரியார் சாட்டிங் செய்து வலையில் வீழ்த்தி இருக்கிறார். இவர்களது வீடியோவும் பாதிரியாரின் லேப்டாப்பில் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் மேற்கண்ட 3 பேரின் குடும்பத்திலும் புயலை வீசச் செய்திருக்கிறதாம். இது மட்டுமல்ல, பெனடிக்ட் பாதிரியாருக்கு படிக்கும்போது, ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டிருக்கிறது.

எனவே, அந்தப் பெண்ணையே திருமணம் செய்து கொண்டு, வாழ்க்கையில் செட்டிலாகி விட நினைத்திருக்கிறார். ஆனால், அந்த காதலுக்கு பெற்றோர் முட்டுக்கட்டை போடவே, பாதிரியார் பணியை தொடர்ந்திருக்கிறார். ஆனாலும், அந்தப் பெண்ணுடனான உறவை மட்டும் பாதிரியார் துண்டிக்கவில்லை. பின்னர், அந்தப் பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணத்தை நடத்தி வைத்த பாதிரியார், அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டு, அந்தப் பெண்ணுடன் கூத்தடித்து வந்திருக்கிறார். இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வரவே, அந்தப் பெண்ணின் குடும்பத்திலும் புயல் வீசத் தொடங்கி இருக்கிறதாம். இப்படி பாதிரியார் பெனடிக்ட் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் நாள்தோறும் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.


Share it if you like it