பாலியல் தொல்லையில் சிக்கிய கிறிஸ்துவ பெண் – காப்பாற்றிய விசுவ ஹிந்து பரிஷத்..!

பாலியல் தொல்லையில் சிக்கிய கிறிஸ்துவ பெண் – காப்பாற்றிய விசுவ ஹிந்து பரிஷத்..!

Share it if you like it

கர்நாடக மாநிலம் தக்‌ஷின கன்னடா மாவட்டத்தில், பிஜாய் என்ற பகுதியை சேர்ந்த கிறிஸ்துவ பெண் ஒருவருக்கு 22 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அந்த கிறிஸ்துவ பெண் மங்களூரு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி உள்ளார். அதில் ”காட்டிபள்ளா பகுதியை சேர்ந்த தொழில் அதிபரான மொகமத் ஷெர்ப்(47) என்பவர் எனது மகளுக்கு போதைப் பொருள் வாங்கி கொடுத்து போதைக்கு அடிமையாக்கி வைத்துள்ளார். போதைக்கு அடிமையாகிய தனது மகளுக்கு கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்ததாக கூறியிருந்தார். இது பற்றி உருவா காவல் நிலையத்தில் பல முறை புகார் அளித்தும் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே தங்கள் அமைப்பு மூலமாக தன் மகளை மீட்டு தரும் படியும், மொகமத் ஷெர்ப் மற்றும் அவரது நண்பர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார்.

இதனை அடுத்து விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மொகமத் ஷெர்ப்பை கைது செய்யும் படி மங்களூர் மாநகர காவல் ஆணையிரிடம் நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளனர். மொகமத் ஷெர்ப் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் படி சூரத்கல் போலிஸாருக்கு, காவல் ஆணையர் உத்தர விட்டார். அதனை தொடர்ந்து சூரத்கல் போலீஸார் மொகமத் ஷெர்ப் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரனையில் அவருக்கு மூன்று மனைவி இருப்பது தெரிய வந்தது. மேலும் மற்ற பெண்களிடம் இதுபோன்ற செயல்களில் ஈடுப்பட்டுள்ளார என போலீஸார் தொடரந்து தீவிரமாக விசாரனை நடத்தி வருகின்றனர்.


Share it if you like it