சித்தராமையாவுக்கு ஷூ மாட்டி விட்ட தொண்டர்… போராளிகள் ‘சைலன்ட்’: நெட்டிசன்கள் வறுத்தெடுப்பு!

சித்தராமையாவுக்கு ஷூ மாட்டி விட்ட தொண்டர்… போராளிகள் ‘சைலன்ட்’: நெட்டிசன்கள் வறுத்தெடுப்பு!

Share it if you like it

சித்தராமையாவுக்கு தொண்டர் ஒருவர் ஷூ மாட்டி விட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், சமூகநீதி போராளிகள் சைலன்ட்டாக இருப்பது ஏன் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

கர்நாடாக மாநில முதல்வராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியைச் சித்தராமையா. தற்போது அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருக்கிறார். அதன்படி, ஒரு வீட்டிற்கு வாக்குச் சேகரிப்பதற்காக சென்ற சித்தராமையா, தனது ஷூவை வெளியே கழற்றி விட்டுச் சென்றார். வாக்குக் கேட்டு விட்டு திரும்பி வந்த அவருக்கு, காங்கிரஸ் கட்சித் தொண்டர் ஒருவர் ஷூவை மாட்டி விட்டார்.

இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் சித்தராமையாவின் செயலை கண்டித்து வருகின்றனர். அதேசமயம், சமூகநீதிப் போராளிகள் என்கிற பெயரில் வலம்வரும், தமிழகத்தைச் சேர்ந்த போலி போராளிகள் யாரும் வாய்திறக்கவில்லை. இதே பா.ஜ.க.வைச் சேர்ந்த யாருக்காவது இதுபோன்று ஷூவையோ அல்லது செருப்பையோ மாட்டி விட்டிருந்தால் கொந்தளித்திருப்பார்கள் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். சமீபத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் தனது செருப்பை எடுத்துக் கொண்டுபோய் காரில் வைக்குமாறு தனது உதவியாளரிடம் கூறியதை, கடுமையாக விமர்சித்தவர்கள்தான் இந்த டுபாக்கூர் போராளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it