அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தியது ஊழல் கிடையாதாம் அமைச்சருக்கு சிறப்பாக முட்டு கொடுத்த நெறியாளர் கார்த்திகேயன்..! 

அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தியது ஊழல் கிடையாதாம் அமைச்சருக்கு சிறப்பாக முட்டு கொடுத்த நெறியாளர் கார்த்திகேயன்..! 

Share it if you like it

முந்தைய அ.தி.மு.க ஆட்சியின் போது, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது பல ஊழல் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து,  அவர் அமைச்சர் பதவியில் அதிரடியாக நீக்கப்பட்டார்.

அதன் பின்னர் தி.முகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், அவருக்கு தி.மு.க தலைமை மின்சாரத்துறை அமைச்சர் பதவி கொடுத்து. இவர் பதவி ஏற்ற நாளில் இருந்து தினம் தினம் அணில்கள் ஓடுவதாக தமிழகம் முழுவதும் பல புகார் தொடர்ந்து வண்ணம் உள்ளது என்பது ஒருபுறம் இருக்க.

முந்தைய ஆட்சியில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. பண மோசடி புகார் கொடுத்தவர்களுக்கு அமைச்சர் பணத்தை திருப்பி கொடுத்து விட்டதால். வழக்கை வாபஸ் பெறுவதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

சிறப்பு நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை தற்பொழுது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. ஊழல் பெருச்சாளிகள் ஒவ்வொருவரும் ஊழல் செய்துவிட்டு, பின்னர், ஊழல் பணத்தை திரும்பி கொடுத்து விட்டேன் என்னை விடுதலை செய்யுங்கள் என்று கூற தொடங்கினால் சட்டத்தின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் என்று பலர் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி வரும் நிலையில்.

தி.மு.க-வின் ஊது குழலாக உள்ள புதிய தலைமுறையின் நெறியாளர் கார்த்திகேயன் ஊழல் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிக சிறப்பாக முட்டு கொடுத்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 


Share it if you like it