மினி லாரி ஏற்றி சமூக ஆர்வலர் கொலை: கல்குவாரி விவகாரத்தில் உரிமையாளர் வெறி!

மினி லாரி ஏற்றி சமூக ஆர்வலர் கொலை: கல்குவாரி விவகாரத்தில் உரிமையாளர் வெறி!

Share it if you like it

கரூர் மாவட்டத்தில் கல்குவாரியை எதிர்த்து குரல் கொடுத்ததால், மினி லாரி ஏற்றி சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தனது கையில் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறிவருகிறார். ஆனால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு படுமோசமாக இருந்து வருகிறது. இதற்கு உதாரணம்தான் சமீபத்திய கொலை, கொள்ளை, பாலியல் பலாத்கார சம்பவங்கள். குறிப்பாக, தமிழகத்தில் 31 நாட்களில் 133 கொலைகள் நடந்திருக்கிறது என்றால், சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு சீர்கெட்டுப் போய்க் கிடக்கிறது என்பது தெளிவாகிறது. இந்த சூழலில்தான், கல்குவாரிக்கு எதிராக குரல் கொடுத்த சமூக ஆர்வலர், மினி லாறி ஏற்றி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

கரூர் மாவட்டம் புகலூர் தாலுகாவில் அமைந்திருக்கிறது குப்பம் கிராமம். இங்கு கடந்த 4 ஆண்டுகளாக அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக அன்னை ப்ளூ மெட்டல்ஸ் என்ற பெயரில் ஒரு கல்குவாரி இயங்கி வந்திருக்கிறது. செல்வக்குமார் என்பவர்தான் இக்கல்குவாரியை நடத்தி வந்திருக்கிறார். இக்கல்குவாரி சட்டவிரோதமாக நடப்பது குறித்து, காளிப்பாளையத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன் மாவட்ட நிர்வாகத்துக்கும், காவல்துறைக்கும் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்திருக்கிறார். மேலும், ஊர் மக்கள் சிலரையும் இணைத்துக் கொண்டு போராட்ட இயக்கத்தையும் நடத்தி வந்திருக்கிறார். இதன் காரணமாக, கல்குவாரிக்கு அதிகாரிகள் சீல் வைத்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் சென்ற ஜெகநாதன், பொலிரோ பிக் அப் வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், ‘இது திட்டமிட்டக் கொலை. கல்குவாரி உரிமையாளர் செல்வக்குமார்தான் திட்டமிட்டு இந்தக் கொலையை அரங்கேற்ற வைத்திருக்கிறார்’ என்று கல்குவாரிக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி இருக்கிறார். இதை மெய்ப்பிக்கும் வகையில், ஜெகநாதன் மீது மோதிய வாகனம் செல்வக்குமாருடையது என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

அதாவது, செல்வக்குமார் தனது வாகனத்தைக் கொண்டு சக்திவேல் என்கிற டிரைவர் மூலம், ஜெகநாதன் மீது மோதவைத்து திட்டமிட்டுக் கொலை செய்ததாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து, அன்னை ப்ளூ மெட்டல்ஸ் கல்குவாரியின் உரிமையாளர் செல்வக்குமார் மற்றும் டிரைவர் சக்திவேல் மீது கொலை வழக்கு பதிவு செய்த க.பரமத்தி போலீஸார், இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். அனுமதியில்லாமல் இயங்கிவந்த கல்குவாரிக்கு எதிராக போராடிவந்த சமூக ஆர்வலர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏர்படுத்தி இருக்கிறது.


Share it if you like it