காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் மரணத் தில் பாரதத்தை தொடர்பு படுத்தி கனடா பிரதமர் தெரிவித்த குற்றச்சாட்டை பாரத வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து கனடா நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ரூட்டோ தெரிவித்த கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜெய்சங்கர் அந்தக் கருத்துகள் பொருத்தமற்ற, ஊக்கம் இல்லாத கருத்துக்கள் எனவும் சாடியுள்ளார். பாரதம் என்றும் சட்டத்தின் ஆட்சிக்கு கட்டுப்படும் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும் பாரத தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றியதற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.