திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கொடைக்கானல் சுற்றுலா தலத்தில் மோயர் பாயிண்ட், குணா குகை பன்மரக்காடு பில்லர்ராக் உள்ளிட்ட இயற்கை எழில் சூழ்ந்த இடங்கள் அமைந்துள்ளன.இந்த இடங்களில் போதுமான வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக அடிப்படை வசதிகளை செய்து தர வனத்துறை முடிவு செய்துள்ளதால் இன்று முதல் (புதன்கிழமை) கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.