நீயா? நானா? கே.எஸ். அழகிரி முன்பே கதகளி ஆடிய  காங்கிரஸ் நிர்வாகிகள்!

நீயா? நானா? கே.எஸ். அழகிரி முன்பே கதகளி ஆடிய காங்கிரஸ் நிர்வாகிகள்!

Share it if you like it

தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கே.எஸ். அழகிரி பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றி கொண்டு இருக்கும் பொழுது. ஐஎன்டியூசி-யின் முன்னாள் மற்றும் இன்னாள் தலைவர்கள் மேடையிலேயே சண்டையிட்டு கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

”தமிழக முதல்வர் ஸ்டாலினின் உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவிழாவிற்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி வெகு விரைவில் தமிழகம் வர உள்ளார். அது குறித்தான விவரங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொள்வதற்காக, சத்திய மூர்த்தி பவனில் நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்தி இருந்தார். அப்பொழுது ஐஎன்டியூசி முன்னாள் தலைவர் பன்னீர் செல்வம் தனக்கு மேடையில் இருக்கை வழங்காமல், தற்பொழுதைய ஐஎன்டியூசி தலைவர் முனுசாமிக்கு இருக்கை வழங்கி இருப்பதற்கு தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்து பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் ரகளையில் ஈடுபட்ட காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்தின் முன்னிலையில் அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் நாற்காலிகளை வீசி சண்டையிட்டு கொண்ட சம்பவம் கடந்த ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தான் கே.எஸ். அழகிரி முன்பு இச்சம்பவம் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it