நிலத்தகராறில் தந்தை, மகள் மீது தாக்குதல்… தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர் அராஜகம்!

நிலத்தகராறில் தந்தை, மகள் மீது தாக்குதல்… தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர் அராஜகம்!

Share it if you like it

திருவண்ணாமலையில் நிலத்தகராறில் தந்தை, மகள் மீது தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர் தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவருக்கும் நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. குணசேகரன் மாமனார் சுந்தரம் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், ஜெயராமனுக்கும் குணசேகரன் மனைவிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து, தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தரம், அடியாட்களுடன் ஜெயராமன் வீட்டுக்கு வந்து தாக்குதல் நடத்தி இருக்கிறார். இதை வீடியோ எடுத்த ஜெயராமன் மகளையும் தாக்கி செல்போனை பறித்திருக்கிறார்கள். இச்சம்பவத்தில் காயமடைந்த ஜெயராமனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டிருக்கிறது. தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தரம், அடியாட்களுடன் வந்து ஜெயராமனை தாக்கும் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it