கடந்த இரண்டு மாதங்களில் பாஜக, ஆர்.எஸ்.எஸ், சேர்ந்த மூவர் படுகொலை…!

கடந்த இரண்டு மாதங்களில் பாஜக, ஆர்.எஸ்.எஸ், சேர்ந்த மூவர் படுகொலை…!

Share it if you like it

கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறும் கேரளாவில் பா.ஜ.க தொண்டர்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் மீது தொடர் தாக்குதல்கள்.

கேரளாவில் பினராய் விஜயன் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைப்பெற்று வருகிறது. அம்மாநிலத்தில் நாளுக்கு நாள் சட்டம், ஒழுங்கு மோசமாகி கொண்டே செல்லும் அவல நிலை இன்று வரை தொடர் கதையாக மாறி வருகிறது. பா.ஜ.க தொண்டர்கள், நிர்வாகிகள், மூத்த தலைவர்கள், மீது தொடர் தாக்குதல்கள். சில மாதங்களுக்கு முன்பு பாலக்காடு அருகே தனது மனைவியுடன் சென்று கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் சஞ்சித் (வயது 27) என்பவரை SDPI கட்சியை சேர்ந்த நபர்கள் படுகொலை செய்த சம்பவம் அடங்குவதற்குள்.

கேரளாவில் மீண்டும் ஒரு துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஓபிசி மோர்ச்சா மாநிலச் செயலாளர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் அவர்கள் PFI கட்சியை சேர்ந்த நபர்களால் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கேரள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது கடும் கண்டனத்தை கேரள பா.ஜ.க தலைவர் சுரேந்திரன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.


Share it if you like it