சமூக விரோதிகளை அவினாசியப்பரின் அருளோடு அகற்றுவோம் – அமைச்சர் எல்.முருகன் !

சமூக விரோதிகளை அவினாசியப்பரின் அருளோடு அகற்றுவோம் – அமைச்சர் எல்.முருகன் !

Share it if you like it

ஊழல் செய்து, மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து உலையில் போட்டு வரும், அரசியல் போர்வையில் வாழும் சமூக விரோதிகளை அவினாசியப்பரின் இணையில்லா அருளோடு இங்கிருந்து அகற்றுவதற்கு உறுதி ஏற்போம் என்று அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

முதலையுண்ட பாலகனை, சுந்தரர் பதிகம் பாடி மீட்டதாக வரலாறு கொண்ட, அவினாசியிலுள்ள அவினாசியப்பர் திருக்கோவிலில் இருந்து, நீலகிரி பாராளுமன்றத் தொகுதிக்கான பிரச்சாரம் துவங்கப்பட்டது. ஊழல் செய்து, மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து உலையில் போட்டு வரும், அரசியல் போர்வையில் வாழும் சமூக விரோதிகளை அவினாசியப்பரின் இணையில்லா அருளோடு இங்கிருந்து அகற்றுவதற்கு உறுதி ஏற்போம்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி அவர்களின் பத்தாண்டு பொற்கால ஆட்சியை மனதார ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மற்றும் நமது கட்சி சொந்தங்கள் ஒன்றிணைந்து அளித்த உற்சாக வரவேற்பானது, நீலகிரி பாராளுமன்றத் தொகுதியை வெற்றி பெறுவதற்கான மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசம் முழுவதும் 400-க்கும் அதிகமான தொகுதிகளையும், தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து 40 தொகுதிகளையும் வெற்றி பெற்று, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி அவர்களை, மூன்றாவது முறையாக அரியணையில் அமர்த்தி வரலாறு படைப்போம்.

“மீண்டும் மோடி-வேண்டும் மோடி”


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *