ஹிந்துன்னா ‘தக்காளி தொக்கா’ முதல்வரே..!

ஹிந்துன்னா ‘தக்காளி தொக்கா’ முதல்வரே..!

Share it if you like it

மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு, ஒரு கடைக்கோடி அப்பாவி ஹிந்துவின் விளங்க முடியா விளக்கக் கடிதம்…

அன்புள்ள மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே… நீங்கள் திராவிடர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், உடன்பிறப்புகள் ஆகியோருக்கு மட்டுமான முதல்வரா அல்லது தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும், தமிழகத்தில் வசிக்கும் ஹிந்துக்கள் உள்ளிட்ட அனைவருக்குமான முதல்வரா என்பது, தாங்கள் முதல்வராக பதவியேற்ற 2021-ம் ஆண்டு மே மாதம் முதலே எனது சந்தேகமாக இருந்து வருகிறது. காரணம், தமிழ்நாட்டில் நடக்கும் சம்பவங்கள் அப்படிப்பட்டவையாக இருக்கின்றன. அல்லது இதுபோன்ற சம்பவங்கள் உங்களின் கவனத்துக்கு வருகிறதா இல்லையா என்பதும் எனக்குத் தெரியவில்லை. ஏனெனில், பிற மதத்துக்கு எதிராகவோ அல்லது திராவிட சித்தாந்தங்களுக்கு எதிராகவோ ஹிந்துக்கள் ஏதாவது சொல்லி விட்டால், தயவு தாட்சணியமின்றி அதிரடி நடவடிக்கை பாயும் உங்களது ஆட்சியில், ஹிந்துக்களுக்கும், ஹிந்து தெய்வங்களுக்கும் எதிராக நடக்கும் சம்பவங்களுக்கு மட்டும் நடவடிக்கை பாயாதது ஏன்? என்பது எனக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

என்ன சம்பவம் என்பது உங்கள் நினைவில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. எனினும், அதை உங்களது கவனத்துக்குக் கொண்டு வர வேண்டியது எனது கடமை. அதாவது, ஹிந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கியப் பிரிவு மாநிலச் செயலாளராக இருக்கும் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், சென்னை மதுரவாயலில் நடந்த ஹிந்து உரிமைகள் மீட்பு மாநாட்டுக் கூட்டத்தில் பேசியபோது, “ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நாளொன்றுக்கு 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். ஆனால், கோயிலுக்கு முன்பு கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை இருக்கிறது. அந்த சிலையை உடைக்கும் நாள் என்னாளோ அந்நாள்தான் ஹிந்துக்களின் எழுச்சி நாளாகும்” என்று கூறினார். இதுகுறித்து திராவிட இயக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில், அடுத்த நாளே அவசர அவசரமாக வழக்குப் பதிவு செய்த, தங்களது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக காவல்துறை, ஏதோ கொலைக் குற்றவாளியைப் போல கனல் கண்ணனை தேட ஆரம்பித்தது. பின்னார், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு புதுச்சேரியில் வைத்து கைது செய்து, சிறையில் அடைத்திருக்கிறது.

இங்குதான் உங்களது அரசு மீதான நடுநிலைத்தன்மையில் என்னைப் போன்ற அப்பாவி ஹிந்துக்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. ஏனெனில், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மைனர் விஜய் என்கிற சுதாகர் என்பவன், சிதம்பரம் நகரில் கோயில் கொண்டிருக்கும் ஹிந்துக்களின் போற்றுதலுக்குரிய தெய்வமாக விளங்கும் தில்லை நடராஜர் பெருமானை, இழிவுபடுத்தி ஒரு வீடியோவை வெளியிட்டான். (இவனது செயல் என்னைப் போன்ற கோடிக்கணக்கான ஹிந்துக்களின் மனதை புண்படுத்தி இருப்பதால் மரியாதை ஒரு கேடா). மைனர் விஜய் வெளியிட்ட இந்த வீடியோவைப் பார்த்தும் கோடான கோடி ஹிந்துக்களின் நெஞ்சத்தில் ஈட்டியை பாய்ச்சியதுபோல் இருந்தது. தில்லை நடராஜருக்கு இப்படியொரு அவமானமா என்று துடிதுடித்து பதைபதைத்துப் போன ஹிந்துக்கள், தங்களின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக காவல்துறையில் புகார் செய்தார்கள். ஆனால், உங்களது காவல்துறை மைனர் விஜய் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே! இது ஏன்? மைனர் விஜய் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவன் என்பதாலா? அல்லது உங்களது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளர் என்பதாலா?

சரி போகட்டும்! கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை உங்களுக்கு நினைவிருக்கிறதா? எப்படி மறப்பீர்கள், மறக்கக்கூடிய சம்பவமா அது? தி.மு.க. ஆட்சி என்பது கிறிஸ்தவர்களாகிய நாங்கள் போட்ட பிச்சை என்று சொன்னவராயிற்றே. உங்களது ஆட்சியையேப் பற்றி அவர் தரக்குறைவாக விமர்சித்தைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் வருத்தமில்லை. உங்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இருக்கும் உறவு அப்படி. ஆனால், காலில் செருப்புப் போட்டு நடப்பதற்கு புதிய விளக்கம் கொடுத்து பூமித்தாயை இழிவாகப் பேசினாரே? அதுதான் என்னைப் போன்ற ஹிந்துக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது. மேலும், பாரத மாதாவையும் அவதூறாகப் பேசி, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினார். இவர் மீது ஹிந்து அமைப்புகள் போலீஸில் புகார் செய்தார்களே? உங்களது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை நடவடிக்கை எடுத்ததா? இதுவரை இல்லையே ஏன்?

சரி இதுவும் போகட்டும்! உங்களது கட்சியின் தீவிர ஆதரவாளர் பாதிரியார் ஜெகத் கஸ்பார் என்ன சொன்னார் என்பது நினைவிருக்கிறதா? சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுய ஜெகத் கஸ்பார், “இந்த நாட்டில் ஆதிகுடியைச் சேர்ந்தவர்களும் (பட்டியலின சமூகம்), இஸ்லாமியர்களும் 40 சதவிகிதம் பேர் வசிக்கிறீர்கள். ஆகவே, இரு சமூகத்தினரும் இணைந்து 40 சதவிகித நிலப்பரப்பை மத்திய அரசிடம் பிரித்துக் கேளுங்கள். ஆதி குடியினர் கேட்காவிட்டால், இஸ்லாமியர்களான நீங்களாவது 20 சதவிகித நிலப்பரப்பை கேளுங்கள்” என்று நாட்டு மக்களிடம் பிரிவினையை தூண்டும் வகையிலும், நாட்டை பிளவுபடுத்தும் வகையிலும் பேசினார். இது எவ்வளவு பெரிய தேச விரோத, தேச துரோகச் செயல் என்பது உங்களுக்குத் தெரியுமா? இவர் மீதும் ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் போலீஸில் புகார் செய்தார்கள். உங்களது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை நடவடிக்கை எடுத்ததா? இல்லையே, ஏன்?

சரி இதுவும் கடந்து போகட்டும்! கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவில் பேசிய பட்டிமன்ற நடுவரும், உங்களது அரசால் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் ஐ.லியோனி, ஹிந்துக்கள் நடத்தும் மணிவிழாவில் வேதவிற்பன்னர்கள் சொல்லும் மந்திரங்களை கொச்சைப்படுத்திப் பேசியிருக்கிறார். ஒரு கிறிஸ்தவரான லியோனி எப்படி எங்களது ஹிந்து மத சடங்குகளைப் பற்றி விமர்சிக்கலாம், அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? பிற மதங்களைப் பற்றியோ அல்லது ஈரோடு ராமசாமி பற்றியோ ஹிந்துக்கள் விமர்சனம் செய்தால் உடனடியாக ஏவல்துறையாக மாறும் உங்களது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக காவல்துறை, லியோனி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அப்படியென்றால் தமிழ்நாட்டில் ஹிந்துக்களுக்கு ஒரு நீதி, இதர மதத்தினருக்கும், திராவிடர்களுக்கும் ஒரு நீதியா? சுருக்கமாச் சொன்னால், உங்களுக்கு வந்தால் ரத்தம், அதே ஹிந்துக்களுக்கு வந்தால் தக்காளி தொக்கு என்று நினைக்கிறீர்கள்.

ஆகவேதான் சொல்கிறேன், உங்களது ஆட்சி இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் திராவிடர்களுக்கானதே தவிர, ஹிந்துக்களுக்கும், தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்குமானதாக இல்லை. நீங்களே ஒருமுறை இஸ்லாமிய திருமண விழாவுக்குச் சென்றிருந்தபோது, அங்கு ஹிந்து திருமண சடங்குகளைப் பற்றி இழிவாகப் பேசியவர்தானே? நீங்கள் மட்டுமல்ல, உங்களது குடும்ப உறுப்பினர்கள் சிலரும், கட்சியினர் சிலரும் ஹிந்துக்களுக்கு விரோதமான போக்கையே கடைப்பிடித்து வருகிறீர்கள். இதே நிலை நீடித்தால் எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் ஹிந்துக்களின் ஓட்டு உங்களுக்கும், உங்களது கட்சியினருக்கும் கிடைக்காது என்பதை கடைக்கோடி அப்பாவி ஹிந்துவான நான் உறுதிபடச் சொல்லிக் கொள்கிறேன். ஆகவே, உங்களது போக்கை மாற்றிக்கொண்டு, சிறுபான்மையினருக்கான அரசாக மட்டுமில்லாமல், எல்லோருக்கும் பொதுவான அரசாக இருக்கும்படி நடந்துகொள்ளுங்கள். ஆகவே, இக்கடிதம் கண்ட பிறகாவது, நான் மேலே குறிப்பிட்டிருக்கும் மைனர் விஜய் என்கிற சுதாகர், பாதிரியார்கள் ஜார்ஜ் பொன்னையா, ஜெகத் கஸ்பார், திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் மீது உங்களது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய காவல்துறையை ஏவிவிட்டு, வழக்குப் பதிவு செய்யச் சொல்வதோடு, கனல் கண்ணனை கைது செய்ததுபோல, மேற்படி நபர்களையும் கைது செய்து சிறையிலடைக்க உத்தரவிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

இப்படிக்கு,

தமிழகத்தின் கடைக்கோடியிலுள்ள ஒரு அப்பாவி ஹிந்து.


Share it if you like it