திராவிட ‘கில்மா’ கழகம்! ‘லு சொல்றியா மாமா… லூலூ சொல்றியா மாமா’?

திராவிட ‘கில்மா’ கழகம்! ‘லு சொல்றியா மாமா… லூலூ சொல்றியா மாமா’?

Share it if you like it

திராவிடர் கழகம் மற்றும் பெரியாரிஸ்ட்கள் பற்றி ஃபிரான்ஸ் தமிழச்சி பற்ற வைத்த நெருப்பு, தமிழகத்தில் கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. ஆனால், ஆளும் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசோ, பெரியாரிஸ்ட்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைகட்டி, வாய்பொத்தி நிற்கிறது என்று குமுறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

பெரியாரிஸ்ட்கள் பெரும்பாலும் தங்களை புரட்சியாளர்களாகவும், பெண்ணியவாதிகளாகவும், முற்போக்குவாதிகளாகவும் காட்டிக் கொள்வது வழக்கம். தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் சிலரையும் தங்களது வலையில் சிக்கவைத்து பெரியாரிஸ்ட்களாக மாற்றி வைத்திருக்கிறார்கள். அந்த வகையில், ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூலூ தேவஜம்லா, ஃப்ரான்ஸ் தமிழச்சி என பெண் பெரியாரிஸ்ட்களின் பட்டியல் மிகவும் நீளம். இந்த நிலையில்தான், உண்மையில் பெரியாரிஸ்ட்கள் புரட்சியாளர்களும் கிடையாது, முற்போக்குவாதிகளும் கிடையாது, திருமணம் கடந்த உறவுகளில் மட்டுமே வல்லவர்கள் என்று சொல்லி, அவர்களது பெண்ணியவாத குட்டை உடைத்திருக்கிறார் ஃபிரான்ஸ் தமிழச்சி.

இதுகுறித்து ஃபிரான்ஸ் தமிழச்சி ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “பெரியாரிஸ்ட் கும்பல் ‘லூலூ குரூப்’ என்ற பெயரில் பாலியல் மோசடியை செய்து வருகிறது. இவர், இல்லற வாழ்க்கையில் திருப்தியில்லாத பெண்களை மற்ற ஆண்களுடன் தகாத உறவில் ஈடுபட தூண்டி வருகிறார். இக்குழுவை சுந்தரவல்லி போன்ற பெரியாரிஸ்ட்களும், கொளத்தூர் மணியின் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த ‘பெரியார்’ சரவணன் உள்ளிட்ட திராவிடக் கழகத்தினர், பெரியாரிஸ்ட்கள் வெளிப்படையாகவே ஆதரித்து வருகின்றனர். இந்த லூலூவின் இயற் பெயர் லூலூ தேவஜம்லா. இவர் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர். தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இவரது கணவர் மோசஸ், வைகோவின் ம.தி.மு.க.வில் இருந்தவர். லூலூ தன்னை ஒரு எழுத்தாளராக நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கிறார். இதற்காக, தனது பாலியல் வாழ்க்கையை பற்றிய புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். இவர், தனது புத்தகம் ஒன்றில், தான் உறங்கிய வெவ்வேறு ஆண்களுடனான தனது அனுபவத்தைப் பற்றி விரிவாக விளக்கிக் கூறியிருக்கிறார்.

பொதுவாக, பெண்களின் நிர்வாணப் படங்களைக் காட்டி, ஆண்கள் மிரட்டுவதுதான் வழக்கம். ஆனால், ஆண்களின் நிர்வாணப் படங்களைக் காட்டி மிரட்டும் ஒரு வகை பெண்தான் லூலூ. மேலும், பெண்களிடமும் அவர்களது நிர்வாணப் படங்களைக் காட்டி பிளாக்மெயில் செய்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். லூலூ செக்ஸ் தொடர்பாக 2 வாட்ஸ் ஆப் குழுக்களை வைத்திருக்கிறார். இந்த குரூப்களுக்கு பெரியார் சரவணன், சிவசடையன், அன்புமதி போன்ற பெரியாரிஸ்ட்கள் அட்மின்களாக இருக்கிறார்கள். மேலும், பல கம்யூனிஸ்ட்களும் இந்தக் குழுவில் அடக்கம். ஆகவே, ‘பெரியார்’ சரவணனின் செயல்பாடுகளுக்கு எதிராக ஆதாரங்களை சேகரித்தேன். ஆனால், இவர்களை ‘கொளத்தூர்’ மணி, சுந்தரவள்ளி, சுப.வீரபாண்டியன், ‘புதியகுரல்’ ஓவியா, மகளிர் அணி மணிதி மற்றும் ஆளும் தி.மு.க. அரசுக்கு நெருக்கமானவர்கள் என பலரும் பாதுகாத்து வருகிறார்கள்” என்றார். மேலும், கலைஞர் டி.வி.யில் பணிபுரியும் பனிமலர் பன்னீர்செல்வம், பெரியாரிஸ்ட் டாக்டர் ஷாலினி, ‘தலித் மனித உரிமை ஆர்வலர்’ எனக் கூறப்படும் ‘எவிடன்ஸ்’ கதிர் எனப்படும் ஆரோக்கியராஜ் என பலரையும் இழுத்து விட்டிருக்கிறார் ஃபிரான்ஸ் தமிழச்சி.

இந்த விவகாரம்தான் பெரியாரிஸ்ட்கள் மற்றும் திராவிட சித்தாந்தவாதிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் பல முக்கிய பிரமுகர்களையும் திக்குமுக்காட வைத்திருக்கிறது. இதில் ஹைலைட் என்னவென்றால், குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நபர்கள் அனைவரும் தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் தி.மு.க.வுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதுதான். குறிப்பாக, சுப.வீரபாண்டியன் ‘சமூகநீதி கண்காணிப்பு குழுவின்’ தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தவிர, பள்ளி பாடப்புத்தகங்களைத் தயாரித்து விநியோகிக்கும் அமைப்பான தமிழ்நாடு பாடப் புத்தகம் மற்றும் கல்விப் பணிகள் கழகத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் சுப.வீ. நியமிக்கப்பட்டிருக்கிறார். ‘எவிடன்ஸ்’ கதிர் 2022-ம் ஆண்டுக்கான ரவுல் வாலன்பெர்க் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனிடையே, ​​‘பெரியார்’ சரவணன், லூலூ உள்ளிட்ட 11 பேர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த விவகாரத்தைப் பற்றி தமிழக அடிமை ஊடகங்கள் எதுவும் இதுவரை வாய் திறக்கவில்லை. அதேபோல, தமிழக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


Share it if you like it