அடுத்த ஆண்டு ஜி,20 மாநாடு நடைபெறும் போது உலகில் போர் இருக்காது என்றும், முழு அமைதி திரும்பிருக்கும் என்றும் பிரேசில் அதிபர் லுலா டி சில்வா தெரிவித்துள்ளார்.பட்டினிக்கு எதிரான போர் உள்ளிட்டவை அடுத்த மாநாட்டின் முக்கிய விவாதப்பொருளாக இருக்கும் என தெரிவித்த, அவர் டெல்லி ஜி-20- உச்சி மாநாட்டை பாரதம் நடத்திய விதம் மிகவும் சிறப்பானது என்றும் குறிப்பிட்டார்.