மதம் மாற மறுத்தால் கொலை: ஹிந்து பெண்ணை மிரட்டும் அப்துல் ரஹ்மான்!

மதம் மாற மறுத்தால் கொலை: ஹிந்து பெண்ணை மிரட்டும் அப்துல் ரஹ்மான்!

Share it if you like it

ஹிந்து பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவதோடு, மதம் மாறி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று அப்துல் ரஹ்மானும், அவனது 3 நண்பர்களும் மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த ஹிந்து பெண் சிருஷ்டி (பெயர் மாற்றம்). இவர், பெற்றோரை இழந்தவர். உறவினர் ஒருவரின் வீட்டில் வசித்து வந்த நிலையில், தற்போது அனாதை இல்லத்தில் வசித்து வருகிறார். இந்த சூழலில், சிருஷ்டி வெளியில் செல்லும் போதெல்லாம், அதே பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்பவர், தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து சிருஷ்டியிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். மேலும், இஸ்லாம் மதத்திற்கு மாறி, தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், இல்லாவிட்டால் உன்னை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்திருக்கிறார்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சிருஷ்டி, இதுகுறித்து போலீஸில் புகார் செய்திருக்கிறார். மேலும், இது தொடர்பாக ஒரு செய்திச் சேனலுக்கும் அவர் பேட்டியளித்திருக்கிறார். அப்போது அவர், அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட முயற்சிப்பதாகவும், மதம் மாறி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் கூறியிருக்கிறார். ஆகவே, போலீஸாரும், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் ஹிந்து அமைப்பினர்தான் தனக்கு பாதுகாப்புக் கொடுத்து காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார். இக்காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it