5 வயது சிறுமிக்கு பாலியல் டார்ச்சர்: மௌலவி அப்துல் சமது கைது… மதரஸாக்களை இழுத்து மூட வலியுறுத்தல்!

5 வயது சிறுமிக்கு பாலியல் டார்ச்சர்: மௌலவி அப்துல் சமது கைது… மதரஸாக்களை இழுத்து மூட வலியுறுத்தல்!

Share it if you like it

மத்தியப் பிரதேசத்தில் மதரஸாவில் படித்த 5 வயது சிறுமிக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த மௌலவி அப்துல் சமது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மதரஸாக்களை இழுத்து மூட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் கிழக்கு நிவார் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது கந்த்வா என்கிற அழகிய நகரம். கோயில்கள் மற்றும் புண்ணிய ஸ்தலங்கள் நிறைந்த நகரம். இங்குள்ள கான்ஷாவாலி பகுதியில் ஜகாரியா மஸ்ஜித்தில் இமானுவேல் மதரஸா செயல்பட்டு வருகிறது. இங்கு மௌலவியாக இருப்பவர் 60 வயதான அப்துல் சமது. இந்த மதரஸாவுக்கு 50-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் படிக்க வந்திருக்கிறார்கள். இதில், 5 வயதுடைய சிறுமிக்கு மௌலவி அப்துல் சமது, பாலியல் ரீதியாக டார்ச்சர் கொடுத்து வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் தாங்க முடியாத சிறுமி, தனது மார்புப் பகுதி வலிப்பதாக பெற்றோரிடம் கூறியிருக்கிறார். அச்சிறுமியிடம் நடந்த விவரத்தை கேட்டிருக்கிறார்கள். சிறுமியும் சொல்லவே, ஆத்திரமடைந்த பெற்றோர், மௌலவி மீது மொகட் காவல் நிலையித்தில் புகார் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, மௌலவி அப்துல் சமதை கைது செய்த போலீஸார், அவரை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆத்திரமடைந்த மக்கள், இதுபோன்ற மதரஸாக்களை இழுத்து மூட வேண்டும். இந்தியாவிலுள்ள பல மதரஸாக்களில் இதுபோன்ற துஷ்பிரயோக சம்பவங்கள் நடக்கின்றன. இதை கேட்பார் யாருமில்லை. சன்னி முஸ்லீம்களின் பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காகவே சிலர் இவ்வாறு செயல்படுக்கிறார்கள். மேலும், பல மதரஸாக்கள் பயங்கரவாதிகளின் புகழிடமாக இருக்கிறது. அதோடு, பயங்கரவாதிகளை உருவாக்கும் இடமாகவும் இருக்கிறது. ஆகவே, இதுபோன்ற மதரஸாக்களை இழுத்து மூட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றனர்.


Share it if you like it