கட்சியில் போஸ்டிங்… இளம்பெண்ணுடன் உல்லாசம்… குடித்து விட்டு அடி உதை… தி.மு.க. நிர்வாகி தில்லாலங்கடி!

கட்சியில் போஸ்டிங்… இளம்பெண்ணுடன் உல்லாசம்… குடித்து விட்டு அடி உதை… தி.மு.க. நிர்வாகி தில்லாலங்கடி!

Share it if you like it

கட்சியில் போஸ்டிங் வாங்கித் தருவதாகக் கூறி, உல்லாசமாக இருந்துவிட்டு, தற்போது குடித்து விட்டு வந்து அடிப்பதாக தி.மு.க. நிர்வாகி மீது குற்றச்சாட்டு கூறி, இளம்பெண் வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் சுகன்யா. இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு, மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் பாச.பிரபு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, சுகன்யாவுக்கு கட்சியில் பதவி வாங்கித் தருவதாகக் கூறிய பாச.பிரபு, அப்பெண்ணுடன் உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார். ஆனால், கட்சியில் போஸ்டிங் வாங்கித் தராததோடு, தற்போது குடித்து விட்டு வந்து சுகன்யாவை அடித்து துன்புறுத்துவதாகக் கூறப்படுகிறது.

பாச.பிரபு தாக்கியதாலும், மிரட்டியதாலும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அட்மிட்டாகி இருக்கிறார் சுகன்யா. மருத்துவமனையில் இருந்தபடியே அவர் வெளியிட்டிருக்கும் வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கட்சியில் பதவி வாங்கித் தருவதாகக் கூறி தன்னை ஏமாற்றி பலமுறை உல்லாசமாக இருந்தார். ஆனால், கட்சியில் பதவி வாங்கித் தரவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு குடித்து விட்டு வந்து என்னை தாக்குகிறார். மேலும், என்னுடன் உல்லாசமாக இருந்தபோது எடுத்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாகவும் மிரட்டுகிறார் என்று கூறியிருக்கிறார்.

இந்த வீடியோ விவகாரம்தான் தற்போது மதுரை தி.மு.க.வை கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது.


Share it if you like it