மதுரையில் தி.மு.க. நிர்வாகிகள் டிஷ்யூம்… டிஷ்யூம்..!

மதுரையில் தி.மு.க. நிர்வாகிகள் டிஷ்யூம்… டிஷ்யூம்..!

Share it if you like it

மதுரையில் தி.மு.க. நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை மாநகராட்சி முத்துப்பட்டி ஆர்.எம்.எஸ். காலனி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், தி.மு.க. பொறியாளர் அணியின் அமைப்பாளராக இருந்து வருகிறார். அதேபோல, 73-வது வார்டு தி.மு.க. வட்டச் செயலாளராக இருப்பவர் விஜயசேகர். இருவருக்கும் இடையே உட்கட்சி பூசல் இருந்து வருகிறது. தவிர, இருவரது குடும்பத்தினருக்கும் இடையே முன்பகையும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், மதுரை மாநகராட்சி தேர்தலின்போது, தி.மு.க. சார்பில் 73-வது வார்டில் போட்டியிட விஜயசேகர் விருப்பம் தெரிவித்திருந்தார்.

ஆனால், அந்த வார்டு காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. தற்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த போஸ், மாமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். விஜயசேகருக்கு சீட் கிடைக்காததால் மணிகண்டன் சந்தோஷத்தில் இருந்து வந்திருக்கிறார். மேலும், இதுகுறித்த தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சொல்லி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகத் தெரிகிறது. இதனால், மணிகண்டன் மீது விஜயசேகர் ஆத்திரத்தில் இருந்து வந்ததோடு, தொடர்ந்து மோதலிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

இந்த நிலையில், தி.மு.க. வட்டச் செயலாளர் விஜயசேகரின் மகன் விஜயபாபு மற்றும் அவரது நண்பர்கள், நேற்று மணிகண்டன் வீட்டிற்குச் சென்று அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில், விஜயபாபுவை கைது செய்த போலீஸார், விஜயசேகர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். தி.மு.க. நிர்வாகிகளுக்குள் மோதிக்கொண்ட இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. நிர்வாகிகள் மோதிக்கொண்ட வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சம்பவத்தை பார்க்க கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்…


Share it if you like it