நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் தற்பொழுது நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடை திறந்து இருப்பதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மக்களின் வாக்குகளை கவரும் வண்ணம் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் பணம், பரிசு பொருட்களை கொடுத்து அப்பட்டமான விதிமீறல்களை செய்து வருகின்றனர் என எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டினை முன்வைத்து வருகின்றனர். தோல்வியை தவிற்கும் பொருட்டு ஏழை, எளிய மக்களின் மண்டையை கழுவி அவர்களின் வாக்குகளை தி.மு.க-வினர் அறுவடை செய்து வருகின்றனர். தேர்தல் நடைபெற்று வரும் இச்சமயத்தில் மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இருக்கும் சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.