10 வயது சிறுமி பலாத்காரம்: மௌலவி கைது!

10 வயது சிறுமி பலாத்காரம்: மௌலவி கைது!

Share it if you like it

10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இஸ்லாமிய மௌலவியை போலீஸார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

நாடு முழுவதும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில், இஸ்லாமிய மதகுருக்கள் பாலியல் சம்பவத்தில் ஈடுபடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஹரியானா மாநிலம் குருகிராமில் இரு மைனர் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக மௌலவி உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்பு, கடலூர் மாவட்டம் பென்னாடத்தில் பேய் ஓட்டுவதாகக் கூறி, மௌலவி ஒருவர் பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற சம்பவம் அரங்கேறியது.

இந்த நிலையில்தான், மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மௌலவி ஒருவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாலகர் மாவட்டம் வாசை என்ற பகுதியில் இச்சம்பவம் நடந்திருக்கிறது. இஸ்லாமிய மௌலவி ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு சாக்லெட் மற்றும் பிஸ்கெட்களை வாங்கிக் கொடுத்து, கடத்திச் சென்றிருக்கிறார். பின்னர், அச்சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்த விஷயம் அப்பகுதி மக்களுக்குத் தெரியவரவே, மௌலவியை கையும் களவுமாகப் பிடித்து தர்ம அடி கொடுத்து, போலீஸில் ஒப்படைத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து மௌலவியை போக்ஸோ சட்டத்தில் சிறையில் அடைத்திருக்கிறார்கள். செக்ஸ் என்றாலே என்னவென்றே தெரியாத பிஞ்சுக் குழந்தைகளிடம், பாலியல் பலாத்கார செயல்களில் ஈடுபடும் இதுபோன்ற மனிதர்களை என்னவென்று சொல்வது?


Share it if you like it