மகள் பாலியல் பலாத்காரம்: காசிம் ஹமீத் ஷேக் கைது!

மகள் பாலியல் பலாத்காரம்: காசிம் ஹமீத் ஷேக் கைது!

Share it if you like it

மனநலம் பாதிக்கப்பட்ட மகளுக்கு தொடர்ந்து பாலியல் டார்ச்சர் கொடுத்து வந்த காசிம் ஹமீத் ஷேக்கை போலீஸார் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் விசைத்தறி நகரமான பிவாண்டியைச் சேர்ந்தவர் காசிம் ஹமீத் ஷேக் (41). இவரது மனைவி உயிரிழந்து விட்ட நிலையில், ஜமீலா (பெயர் மாற்றம்) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஜமீலாவும் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவர். இவருக்கு ஆயிஷா (பெயர் மாற்றம்) என்கிற பெண் குழந்தை இருந்த நிலையில், காசிம் ஹமீத் ஷேக்கை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். காலப்போக்கில்தான் ஜமீலாவின் பெண் குழந்தை ஆயிஷா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

இது ஒருபுறம் இருக்க, காசிம் ஷேக்கின் பாலியல் டார்ச்சர் தாங்காமல் ஜமீலா வீட்டை விட்டு ஓடிவிட்டார். தற்போது, அவர் அண்டை நாட்டில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், ஜமீலாவின் மகள் ஆயிஷா பூப்பெய்தினார். இதன் பிறகு, காசிம் ஷேக்கின் பார்வை ஆயிஷாவின் பக்கம் திரும்பியது. தற்போது ஆயிஷாவுக்கு 14 வயதாகும் நிலையில், கடந்த சில வருடங்களாகவே அவருக்கு காசிம் பாலியல் டார்ச்சர் கொடுத்து வந்திருக்கிறார். இந்த விவரம் எப்படியோ அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு தெரியவந்திருக்கிறது.

இதையடுத்து, ஆயிஷாவை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்திருக்கிறார்கள். இதன் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து காசிம் ஹமீது ஷேக்கை கைது செய்தனர். மேலும், ஆயிஷாவை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it