சீமான் சொன்ன துப்பாக்கி கதை: மாஜி ராணுவ அதிகாரி சொன்ன பதில்!

சீமான் சொன்ன துப்பாக்கி கதை: மாஜி ராணுவ அதிகாரி சொன்ன பதில்!

Share it if you like it

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கூறும் கதைகள் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலம். அந்த வகையில், இவர் சொன்ன ஏ.கே. 74 துப்பாக்கி கதை தற்பொழுது காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது. இக்காணொளியை பார்த்து விட்டு முன்னாள் ராணுவ உயர் அதிகாரி மேஜர் மதன் குமார் சொன்ன பதில் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர் கூறும் கதைகளை கேட்க, தமிழகத்தில் இன்று வரை மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. தனது கட்சியில் உள்ள தம்பி, தங்கைகள் மாற்று கட்சிகளுக்கு ஓடிவிட கூடாது. என்பதற்காக தினம் தினம் ஏதேனும் ஒரு கதையை இவர் கூறி வருகிறார் என்பது பலரின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் என்னும் பழமொழிக்கு ஏற்ப, இவர் கூறும் பொய்க் கதைகளை அறிவார்ந்த தமிழக மக்கள் உடனுக்குடன் கண்டுபிடித்து விடுகின்றனர், என்பது நிதர்சனமான உண்மை. அந்த வகையில், சீமான் சொன்ன (கப்ஸா ) துப்பாக்கி கதை கேட்டு விட்டு ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ உயர் அதிகாரி மேஜர் மதன் குமார் தனது வேதனையை இவ்வாறு வெளியிட்டுள்ளார்: சில நேரங்களில் நான் என் வாழ்க்கையில் எதுவும் செய்யவில்லை என்று உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.


Share it if you like it