தமிழக மக்களை மதுவால் கொல்லும் ஜெயா அரசின் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு “மக்கள் அதிகாரம்” அமைப்பை சேர்ந்த கோவன் அவர்கள் “மூடு டாஸ்மாக்கை மூடு, என்று பாடலை பாடி இருந்தார். அந்நாட்களில் இப்பாடல் பெரும் பரப்பை ஏற்படுத்தி இருந்தது. இன்றும் இப்பாடலை சமூக வலைத்தளங்களில் காண முடியும். தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கூட இப்பாடலுக்கு தங்களது ஆதரவினை தெரிவித்து இருந்தனர்.
கொரோனா தொற்று பரவி வரும் இவ்வேளையில், மக்கள் உயிர் பற்றி துளியும் கவலைப்படாமல் டாஸ்மாக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் தி.மு.க அரசு குறித்தோ, தனது தந்தை குடிக்கிறார் என்பதற்காக தற்கொலை செய்து கொண்ட +1 மாணவன் குறித்தோ இன்று வரை வாய் திறக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் தோழர் கோவன் எங்கே என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.