மம்தா பானர்ஜி ராகுல் மீது குற்றசாட்டு : இண்டியா கூட்டணியில் விரிசலா ?

மம்தா பானர்ஜி ராகுல் மீது குற்றசாட்டு : இண்டியா கூட்டணியில் விரிசலா ?

Share it if you like it

சமீபத்தில் டெல்லியில் அமைந்துள்ள பாராளுமன்றம் பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டதால் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவை சேர்ந்த எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் 141 பேர் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி, ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் அவை நடவடிக்கையின் போது செய்வதை போன்று கிண்டலடித்து அனைவரின் முன்னிலையிலும் செய்து காட்டினார். இதனை மிகவும் உற்சாகமாக அங்கிருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கரை திரிணமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி மிமிக்ரி செய்ததும், அதனை ராகுல்காந்தி வீடியோ எடுத்ததுதான் தவறு, ராகுல்காந்தி தான் பிரச்சனைக்கு காரணம் என்று குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மம்தா பானர்ஜி.


Share it if you like it