தேசிய கொடியை அவமதித்த ஸ்டாலினை தொடர்ந்து தேசிய கீதத்தை அவமதித்த மம்தா பானர்ஜி..!

தேசிய கொடியை அவமதித்த ஸ்டாலினை தொடர்ந்து தேசிய கீதத்தை அவமதித்த மம்தா பானர்ஜி..!

Share it if you like it

தேசிய கீதத்தை அவமதித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நான் தான் இருப்பேன் என பிரபல அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் மூலம் தொடர்ந்து விளம்பரம் செய்து வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அவர்கள் நாட்டு மக்களின் உணர்வுகளுடன் பிண்ணி பிணைந்த தேசிய கீதத்தை அமர்ந்து கொண்டு தப்பும், தவறுமாக, பாடியது நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் மம்தா பேனர்ஜி தேசிய கீதத்தை அவமதித்து இருக்கிறார் என்றால், துணை பிரதமராக வர வேண்டும் என துடிக்கும் ஸ்டாலின் ஒருபடி மேலே சென்று தேசிய கொடியை அவமதித்தவர். இவர்கள் இருவரும் இணைந்து நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பிற்கு வந்தால் தேசத்திற்கும், தேச நலனுக்கு, எதிராக மட்டுமே செயல்படுவர் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it