மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்குகளை அசாம் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள நீதிபதியை நியமிக்குமாறு கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஆணை பிறப்பித்துள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிஐ 21 வழக்குகளை விசாரித்து வரும் நிலையில் நியாயமான விசாரணை உறுதி செய்யவே வேறு மாநிலத்திற்கு வழக்குகள் மாற்றப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.