ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அதற்காக பலர் டிக்கெட் வாங்கி இருந்தனர். ஆனால் நிகழ்ச்சியை சரியாக ஏற்பாடு செய்யாததால் பலருக்கு இருக்கை கிடைக்காமல் போனது. அது மட்டுமின்றி ஏராளமானோர் நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்கு அனுமதி கிடைக்காமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். இதனால் டிக்கெட் வாங்கி ஏமாந்தவர்கள் ஆத்திரம் அடைந்து நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இச்சம்பவத்திற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளனர். இருக்கை கிடைக்காத நபர்களுக்கு பணம் திருப்பித் தரப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.